youtube

Saturday, July 20, 2013

நவகிரஹ மந்த்ரம்

நவகிரஹ மந்த்ரம்

          நவகிரஹ சாபம் தீர அகஸ்தியர் அருளிய பாடல்

" போ மென்று விடுக்கதே இன்னும் கேளு
பொல்லாத    நவகிரஹ சாபம் தீர
நாமொன்று சொல்கிறோம் மைந்தா
நலமான பூரணத்தை நாட்டிப்  பார்த்து
ஓ மென்று  பூரித்து ரேசகமே பண்ணி
 ஒரு மொழியால் ககும்பத்தில் நின்றால் மைந்தா
ஆ மென்ற   நவகிரஹ சாபம் எல்லாம்
அப்போதே அகன்றுவிடும் அறிந்துபாரே !"

            மனம் என்ற பேய்க்குரங்கை அடக்கிவைத்து இறைவனிடம் சரணடைந்தால் துன்பங்கள் தீரும் .

  திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை "


"நலமே பெற்று வளமாய் வழ்க! "

                                                                                 

Tuesday, July 9, 2013

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )
                                எத்தனையோ மகான்களுக்கு துன்பன்களும் துயரங்களும் வந்தன, அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர் . ஆனால் சாதாரண மனிதனால் அப்படி இருக்க முடியது . நோய் வந்தால் மருத்துவம் பார்ப்பதும் ,கஷ்டங்கள் வந்தால்  பரிகாரங்கள் தேடுவதும் மனித மனம் .அதை தவறு என்று சொல்வதற்கில்லை .
எதைசெய்தாலும் ,தெய்வத்தின் அருளை வேண்டுங்கள் தெய்வத்திடம் சரணாகதி 
அடையுங்கள் அவன் காப்பாற்றுவான் ,அப்படி இல்லாவிட்டால் இறைவன் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் 
பரிகாரம் என்ற பெயரில் போலிகளிடம் ஏமாறவேண்டம்.ஆனால் பரிகாரம் பொய் இல்லை
அதைப்பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம் .

                            ஒரு தீக்குச்சியில் எரியும் நெருப்பை அணைத்துவிடலாம் .ஒரு வாளி தண்ணீரில்
அணையும் நெருப்பும் உண்டு ,தீயணைப்பு வண்டி வந்து அணைக்க வேண்டிய நெருப்பும் உண்டு .
அணைக்க முடியாத காட்டுத்தீயும் உண்டு .கனமாக மழை பெய்தால் காட்டுத்தீயும்
அணைத்துவிடும் . அதுபோலதான்   கடவுளின் அருள். நல்ல குருவின் உதவியுன் கடவுளை தேடுங்கள் ,அவரிடம் சரணடையுங்கள்
கடவுள் உங்களை கப்பார் .நீங்கள் எந்த மதத்தவராயினும் சரி ,அந்த மதத்தின் மீதும்
அந்த கடவுளின்  மீதும் நம்பிக்கை வையுங்கள் ,"இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று
சொல்லுவதில்லை .(தொடரும்)

                                                                 

Thursday, July 4, 2013

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

                                ஒரு பெரும் செல்வந்தரின் ஒரே மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக5 ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்ததில் ஐவரும் வெகு பிரமாதம்  . 
என்று கூறிவிட்டனர். திருமணத்திற்கு நாளும்  குறித்து  திருமணம் நடக்க ஒருவாரம் இருக்கும் போது , மாப்பிள்ளை விபத்தில் இறந்துவிட்டார். இது ஏன் நடந்தது ?
                                         ராமாயணத்தில் ராமருக்கு  பட்டாபிஷேகம் நடக்க நாள் குறித்தவர் வசிஷ்ட மகரிஷி . அவர் குறித்த நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கவில்லை. ராமன்  காட்டிற்கு சென்றார் . இது ஏன் நடந்தது ?

                                        இயேசு அருள் நிறைந்தவர் , தேவகுமாரன் , மகாவல்லமை   உடைவர் , இறந்தவரை உயிர்பிக்க செய்தார் , குஷ்டரோகியை குணமாக்கினார் .பிற்காலத்தில்         நடக்கப்போவதை  உணர்ந்தவர் . அவர் கூறுகிறார் " எவனுடைய பாதத்தை
கழுவி நான் முத்தமிடுகிறேனோ அவன் என்னைக்  காட்டிக்கொடுப்பான் . பேதுரு என்ற சீடனை நோக்கி " பேதுரு கோழி கூவுவதற்கு முன் என்னை நீ 3 முறை மறுதலிப்பாய் ; நான் இறந்தவுடன் என் ஆடைகளை பங்கு போட்டுக்கொள்வார்கள் " என கூறினார் .அப்படியே நடந்தது ,பிதாவின் கட்டளை எதுவோ அது நடக்கட்டும் என  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் .

(

Tuesday, July 2, 2013

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம் (தொடர்ச்சி)

ஜாதகம் உண்மையா ? பொய்யா ?

 சரியாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை வைத்து தெய்வ அருள் உள்ள ஒரு ஜோதிடர் 90 % சரியாகக கூறிவிடுவார் கூறிவிடுவார். பஞ்சாங்கத்தில்  வாக்கியம் , திருக்கணிதம் என இருக்கிறது, இரண்டிற்கும் கிரகப் பெயர்ச்சியில் வித்தியாசம் உள்ளது .ஒரு பெண்ணின் ஜாதகத்தில் வாக்கிய பஞ்சங்கப்படி ஒரு ஜோதிடர் புனர்பூச நட்சத்திரம்
மிதுன ராசி என குறித்திருக்கின்றார் . மற்றொருவர் கடக ராசி என    குறித்திருக்கின்றார். திருக்கணிதபடி பூசம் நட்சத்திரம் என குறித்திருக்கின்றார் . இப்படி ஜாதகம் இருந்தால் எப்படி பலன் சொல்வது ?. நடந்த சம்பவம் ஒன்றை கூறுகின்றேன்.




Monday, July 1, 2013

ஜாதகம் / ஜோதிடம்

ஜாதகம் / ஜோதிடம்

'ஜோதிடர்கள் கிரகங்களின் அசைவுகளைக் கொண்டு இயன்றவரை பலன்களைமுன்கூட்டியேஅறிகின்றனர்.ஆயினும் நம்மைப் படைத்த பிரமனைத் தவிர ,வேறுயாராலும் திட்டவட்டமாக இதுதான் நடக்கும் என கூற முடியாது ,"
இது காளிதாசரின் வாக்கு.

         அப்படியானால் ஜோதிடத்தை நம்பலாமா ?  ஜோதிடம் உண்மையா ? பொய்யா ? 


  (தொடரும்)